Posts

வன்னியர் வரலாறு நூல்கள்

அன்புடையீர் வணக்கம், இதுவரையில் வெளிவந்துள்ள வன்னியர் வரலாற்று நூல்களின் பட்டியலை சேகரித்து, இந்தப் பக்கத்தில் பகிர விருப்பம். முழுமையான நூற் பட்டியலை கண்டறிய, விபரங்களை அறிந்தவர்கள் உதவலாம். நூற் பட்டியலை சேகரித்ததும்; எழுதியவர், வெளியீட்டாளர், எங்கு கிடைக்கும், ஆகிய விபரங்களும் சேர்க்கப்படும்.
 இதனால், வன்னியர் வரலாறு பற்றி படித்து அறிய விரும்புகிறவர்களுக்கு, ஓர் சிறு தகவல் உதவியினைச் செய்ய முடியும் என நினைக்கிறேன்.
 வன்னியர் நூல்கள் பற்றி அறிந்தவர்கள் தகவல் தரலாம். தொடர்புக்கு: murpokku@gmail.com நன்றி.
 கணேஷன் குருநாதன்

எம். ஏ. மாணிக்கவேலு நாயக்கர்

எம். அழகப்ப மாணிக்கவேலு நாயக்கர் (எம். ஏ. மாணிக்கவேலு நாயக்கர், டிசம்பர் 14, 1896 – ஜூலை 25, 1996) ஒரு தமிழக அரசியல்வாதி. இருமுறை தமிழக அமைச்சரவையில்உறுப்பினராகவும், ஆறாண்டுகள் தமிழ்நாடு சட்டமன்ற மேலவைத் தலைவராகவும், இரு ஆண்டுகள் இந்திய மாநிலங்களவைஉறுப்பினராகவும் இருந்தவர். வன்னியர் சாதியில் பிறந்த மாணிக்கவேலு சட்டக் கல்வி கற்றவர். இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இணைந்து செயல்பட்ட அவர் பின்னர், அதிலிருந்து பிரிந்த சுராஜ்யக் கட்சியில் இணைந்தார். 1926 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினரானார். 1937 வரை அப்பதவியில் நீடித்தார். 1935ல் சுராஜ்யக் கட்சி மீண்டும் காங்கிரசுடன் இணைந்து விட்டது. 1951ல் வன்னிய சாதியினரின் நலனுக்காக குரல் கொடுக்க காமன்வீல் கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். இக்கட்சி வட ஆற்காடு மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் செல்வாக்கு பெற்றிருந்தது. 1952 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) ஆதரவுடன் போட்டியிட்டது. இத்தேர்தலில் திமுக நேரடியாகப் போட்டியிடவில்லை. மாறாக திராவிட நாடு கோரிக்கையைப் பற்றி சட்டமன்றத்தில் பே...

எஸ். எஸ். ராமசாமி படையாட்சியார்

சிவ சிதம்பர ராமசாமி படையாட்சி (எஸ். எஸ். ராமசாமி படையாட்சி, செப்டம்பர் 16, 1918 -ஏப்ரல் 3, 1992) ஒரு தமிழக அரசியல்வாதி. தமிழக அமைச்சரவையில் உறுப்பினராகவும் இந்திய மக்களவை உறுப்பினராகவும் இருந்தவர். 1951ல் வன்னிய குல சத்திரிய சங்கம் ஒரு சாதி மாநாட்டைக் கூட்டி வன்னியருக்காக ஒரு மாநிலந்தழுவிய கட்சியினை உருவாக்க முயன்றது. ஆனால் தலைவர்களுக்குள் இருந்த வேறுபாடால் இம்முயற்சி வெற்றி பெறவில்லை. மாறாக வட ஆற்காடு மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் செல்வாக்கு பெற்றிருந்த எம். ஏ. மாணிக்கவேலு நாயக்கர் காமன்வீல் கட்சியினைத் தொடங்கினார். தென்னாற்காடு மற்றும் சேலம் மாவட்ட வன்னியர்கள் ராமசாமி படையாட்சியின் தலைமையில் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி என்ற மற்றொரு கட்சியைத் தொடங்கினர். இரு கட்சிகளும் 1952 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) ஆதரவுடன் போட்டியிட்டன. இத்தேர்தலில் திமுக நேரடியாகப் போட்டியிடவில்லை. மாறாக திராவிட நாடு கோரிக்கையைப் பற்றி சட்டமன்றத்தில் பேசுவோம் என்று உறுதியளித்து ஒப்பந்ததில் கையெழுத்திட்ட கட்சிகளுக்கும் சுயேட்சை வேட்பாளர்களுக்கும் ஆதரவளித்தது. அவ்வாறு உறுதியளித...

"வரலாற்றில் வன்னியர் மகாவம்சம்” நூல்கள்

வரலாற்றில் வன்னியர் மகாவம்சம்: தொகுதி-1 ஆண்ட பரம்பரை தொகுதி-2 வன்னியர் இயக்கமும் எழுச்சியும் தொகுதி-3 சான்றோர்கள் தொகுதி-4 கல்வி வள்ளல்கள்​ தொகுதி-5 தியாகிகள் தொகுதி-6 வன்னியர் அரசியல் தொகுதி-7 நமது படைப்பாளிகள்  நூல் ஆசிரியர்: “அச்சமில்லை” ந. இறைவன்  வெளியீடு: வன்னியகுல சத்திரிய மகாசங்கம் (125 வது ஆண்டு விழா வெளியீடு)

வன்னியர் வரலாறு நூல் பட்டியல் - 1

1. அடங்காப்பற்று (வன்னி) வரலாறு - அருணா செல்லத்துரை 2. வன்னிய புராணம் - சைவ கி. வீரப்பிள்ளை 3. வன்னியர் - கலாநிதி சி. பத்மநாதன் 4. சிலை எழுபது – கம்பர் 5. க்ஷத்ரியன் இதழ் தொகுப்பு - அண்ணல் கண்டர் 6. கந்தசாமி கண்டர் - அண்ணல் கண்டர் 7. வன்னியர் வரலாற்று நூல்கள் - மணிவாசகர் பதிப்பகம் 8. வன்னியர் வரலாறு - நடன காசினாதன் - மெய்யப்பன் பதிப்பகம்

பள்ளி முத்தினா படையாட்சி...!

"பள்ளி முத்தினா படையாட்சி" என்பதன் பொருள், சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதைப்போல...! அதாவது; பள்ளி என்பவர்கள் மென்மைபோக்கு கொண்ட, கல்வி போதிக்கும் நோக்கம் கொண்டவர்கள், நெறியுடன் தார்மீகம் கொண்டு வாழ்பவர்கள். இவர்கள் மென்மையானவர்கள். நியாயத்தின் பக்கம் இருப்பவர்கள். இத்தகைய கல்வியாளர்களான பள்ளிகள், அதர்மங்களை, அட்டூழியங்களை எதிர்க்க, பள்ளிப்படை கட்டி, படையாட்சிகளாக மாறி, படையை ஆட்சி செய்து, அட்டூழியங்களை ஒழித்து, தர்மத்தை நிலை நிறுத்துவார்கள். இ தனால் தான், பள்ளி முத்தினா படையாட்சி என்கிற வழக்கம் வந்தது. அதாவது, மிருதுவானவர்கள் வீர்யம் கொண்டால் படையாட்சி...! கணேஷன் குருநாதன்

“படையாட்சி” என்பது ஜாதியா?

ஜாதிப் பெயர் எது? பட்டப்பெயர் எது? என்பதில், பொதுவாக பலருக்கும் குழப்பம் உண்டு. ஒவ்வொரு சமூகத்திற்கும் பல பட்டப்பெயர்கள் இருப்பினும், “அரசாங்கத்தின் மூலம், எந்தெந்தப் பெயர்களில், ஜாதி சான்றிதழ் பெற இயலுமோ, அவைகளை மட்டுமே, ஜாதிப் பெயர் என நான் கணக்கில் எடுத்துக்கொள்கிறேன். உதாரணமாக; வன்னியர் என பொது அடையாளம் இருப்பினும், வன்னியர்களுக்கு பல பட்டப்பெயர்கள் இருக்கின்றன. என்றாலும், கீழ்கண்ட பெயர்களில் மட்டுமே, ஜாதி சான்றிதழை, அரசாங்கமானது வன்னியர்களுக்கு வழங்குகிறது. “வன்னியகுல க்ஷத்ரியர் வன்னியர் வன்னிய கவுண்டர் கவுண்டர் கண்டர் படையாட்சி பள்ளி அக்னிகுல க்ஷத்ரியர்” கணேஷன் குருநாதன்